புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
ADVERTISEMENTS
இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என
ADVERTISEMENTS
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
ADVERTISEMENTS
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். துறை :இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின்
ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். துறை :இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின்
ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,