புறநானூறு - 251. அவனும் இவனும்!
ADVERTISEMENTS
ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,
கான யானை தந்த விறகின்
ADVERTISEMENTS
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!
ADVERTISEMENTS
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை துறை: தாபத வாகை
திணை: வாகை துறை: தாபத வாகை