புறநானூறு - 117. தந்தை நாடு!
ADVERTISEMENTS
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,
ADVERTISEMENTS
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.
ADVERTISEMENTS
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை