புறநானூறு - 350. வாயிற் கொட்குவர் மாதோ!
ADVERTISEMENTS
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே, தாங்காது?
படுமழை உருமின் இறங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்து, எம்
ADVERTISEMENTS
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எகின் சிவந்த உண்கண்,
தொடியுறழ் முன்கை, இளையோள்
ADVERTISEMENTS
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.
பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம்
புகுந்தார் ஆயத்தனார்
திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி
புகுந்தார் ஆயத்தனார்
திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி