புறநானூறு - 178. இன்சாயலன் ஏமமாவான்!
ADVERTISEMENTS
கந்துமுனிந்து உயிர்க்கும்யானையொடு,பணைமுனிந்து,
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ADVERTISEMENTS
ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை,
ADVERTISEMENTS
ஏம மாகத் தான்முந் துறுமே.
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன்
எனவும் பாடம்.
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன்
எனவும் பாடம்.
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை