புறநானூறு - 358. விடாஅள் திருவே!
ADVERTISEMENTS
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட் டனரே காதலர்; அதனால்
ADVERTISEMENTS
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.
ADVERTISEMENTS
பாடியவர்: வான்மீகியார்
திணை: காஞ்சி துறை: மனையறம், துறவறம்
திணை: காஞ்சி துறை: மனையறம், துறவறம்