புறநானூறு - 215. அல்லற்காலை நில்லான்!
ADVERTISEMENTS
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
ADVERTISEMENTS
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வ்க் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.
ADVERTISEMENTS
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண் துறை: இயன்மொழி
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்;
'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய
செய்யுள் இது.
திணை: பாடாண் துறை: இயன்மொழி
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்;
'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய
செய்யுள் இது.