புறநானூறு - 115. அந்தோ பெரும நீயே!
ADVERTISEMENTS
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு
ADVERTISEMENTS
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!
ADVERTISEMENTS
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.