புறநானூறு - 273. கூடல் பெருமரம்!
ADVERTISEMENTS
மாவா ராதே ; மாவா ராதே ;
எல்லார் மாவும் வந்தன ; எம்இல்,
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே-
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
ADVERTISEMENTS
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே?
ADVERTISEMENTS
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை துறை: குதிரை மறம்
திணை: தும்பை துறை: குதிரை மறம்