புறநானூறு - 295. ஊறிச் சுரந்தது!
ADVERTISEMENTS
கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்,
தோடுஉகைத்து எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
ADVERTISEMENTS
சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி,
வாடுமலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
ADVERTISEMENTS
பாடியவர்: அவ்வையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி