புறநானூறு - 233. பொய்யாய்ப் போக!
ADVERTISEMENTS
பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்,
ADVERTISEMENTS
போர்அடு தானை, எவ்வி மார்பின்
எகுஉறு விழுப்புண் பல என
வைகறு விடியல், இயம்பிய குரலே.
ADVERTISEMENTS
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.