புறநானூறு - 308. நாணின மடப்பிடி!
ADVERTISEMENTS
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே;
ADVERTISEMENTS
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்,
ADVERTISEMENTS
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.
பாடியவர்: கோவூர் கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை
திணை: வாகை துறை : மூதின் முல்லை