புறநானூறு - 114. உயர்ந்தோன் மலை!
ADVERTISEMENTS
ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில்,
ADVERTISEMENTS
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
ADVERTISEMENTS
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.