புறநானூறு - 133. காணச் செல்க நீ!
ADVERTISEMENTS
மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது, காண்பறி யலையே;
காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்,
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,
ADVERTISEMENTS
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!
ADVERTISEMENTS
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை.