புறநானூறு - 277. சிதரினும் பலவே!
ADVERTISEMENTS
மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
ADVERTISEMENTS
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
ADVERTISEMENTS
பாடியவர்: பூங்கணுத்திரையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி