புறநானூறு - 365. நிலமகள் அழுத காஞ்சி!
ADVERTISEMENTS
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக,
இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்,
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்,
ADVERTISEMENTS
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற,
உள்ளேன் வாழியர், யான் எனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
ADVERTISEMENTS
உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.
பாடியவர்: மார்க்கண்டேயனார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி