புறநானூறு - 304. எம்முன் தப்பியோன்!
ADVERTISEMENTS
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே;நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு
ADVERTISEMENTS
நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று;
ADVERTISEMENTS
இரண்டா காது அவன் கூறியது எனவே.
பாடியவர்: அரிசில்கிழார்
திணை: தும்பை துறை : குதிரை மறம்
திணை: தும்பை துறை : குதிரை மறம்