புறநானூறு - 356. காதலர் அழுத கண்ணீர்!
ADVERTISEMENTS
களரி பரந்து, கள்ளி போகிப்,
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
ADVERTISEMENTS
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்,
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
ADVERTISEMENTS
பாடியவர்: தாயங்கண்ணனார்
திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி
திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி