புறநானூறு - 330. ஆழி அனையன்!
ADVERTISEMENTS
வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
ADVERTISEMENTS
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.
ADVERTISEMENTS
பாடியவர்: மதுரை கணக்காயனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை
திணை: வாகை துறை : மூதின் முல்லை