புறநானூறு - 282. புலவர் வாயுளானே!
ADVERTISEMENTS
திணையும் துறையும் தெரிந்தில.
எகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,
யாண்டுளனோ?வென, வினவுதி ஆயின்,
. . . . . . . . . . . .
ADVERTISEMENTS
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
ADVERTISEMENTS
பலகை அல்லது, களத்துஒழி யதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,
நாநவில் புலவர் வாய் உளானே.
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.