புறநானூறு - 293. பூவிலைப் பெண்டு!
ADVERTISEMENTS
நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
ADVERTISEMENTS
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
ADVERTISEMENTS
பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி துறை: பூக்கோட் காஞ்சி
திணை: காஞ்சி துறை: பூக்கோட் காஞ்சி