புறநானூறு - 289. ஆயும் உழவன்!
ADVERTISEMENTS
ஈரச் செவ்வி உதவின ஆயினும்,
பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,
வீறுவீறு ஆயும் உழவன் போலப்,
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
மூதி லாளர் உள்ளும், காதலின்
ADVERTISEMENTS
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,
இவற்கு ஈக ! என்னும்; அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி_பாண! பாசறைப்,
பூக்கோள் இன்று என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?
ADVERTISEMENTS
பாடியவர்: கழாத்தலையார்.
திணை, துறை. தெரிந்தில.
திணை, துறை. தெரிந்தில.